மடத்துகுளம் தாலுகா பகுதியில் பல ஆண்டுகளாக குடியிருந்துவரும் தொழிலாளர்களுக்கு அரசின் சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி வட்டாட்சியர்அலுவலகத்தை வெள்ளியன்று விவசாய தொழிலாளர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
தாராபுரத்தில் குடிநீர் கேட்டு வட்டாட்சியர் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.தாராபுரம் அடுத்த மரவாபாளையத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கக்கோரி ஆதித்தமிழர் சனநாயக பேரவை சார்பில் மாநில தலைவர் அ.சு.பவுத்தன் தலைமையில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.